Home தாயகச் செய்திகள் திருமலை ஜெயந்தி விகாரை; கட்டுமானத்தை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

திருமலை ஜெயந்தி விகாரை; கட்டுமானத்தை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு!

Share
Share

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள சிறீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டடத்தின் தற்போதைய கட்டுமானத்தை இடைநிறுத்துமாறும் புதிய கட்டுமானம் அல்லது மாற்றங்கள் எதையும் செய்யக்கூடாது என்றும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் விகாராதிபதிக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை பொலிஸ் கண்காணிப்பாளர்
ஜே.எல். அஜித் குமார, துறைமுக பொலிஸ்பொறுப்பதிகாரி மற்றும் தலைமை ஆய்வாளர் கே.டபிள்யூ.ஜி.எஸ்.கே. சமரசிங்க ஆகியோர் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் நீதிவான் எம். என்.எம். சம்சுதீன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

திருகோணமலையில் உள்ள டச்சு விரிகுடா கடற்கரையில் சிறீ சம்புத்த ஜெயந்தி விகாராதிபதி தற்காலிக கட்டடம் கட்டுவது தொடர்பாக, கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ பிரிவு தாக்கல் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் நீதிமன்றத்தில் பி அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இதன்போது, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிவான், தொடர்புடைய கட்டுமானத்தின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக் குறிக்கும் அறிக்கையை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு துறைமுக பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதேசமயம், விகாரை கட்டுமானத்தை அகற்றுமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு தடை உத்தரவு கோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் டிசெம்பர் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...