Home தாயகச் செய்திகள் சுன்னாகம் பொலிஸார் இருவர் பணியிடை நீக்கம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுன்னாகம் பொலிஸார் இருவர் பணியிடை நீக்கம்!

Share
Share

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர்
நேற்றைய தினம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிஸாரால்
கைது செய்யப்பட்டடனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார்
அனுமதி கோரிய நிலையில் நீதிமன்று அதற்கு அனுமதி வழங்கியது.

தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் இருவர் நேற்றைய தினம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...