சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர்
நேற்றைய தினம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிஸாரால்
கைது செய்யப்பட்டடனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார்
அனுமதி கோரிய நிலையில் நீதிமன்று அதற்கு அனுமதி வழங்கியது.
தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் இருவர் நேற்றைய தினம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
Leave a comment