கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யூனியன் குளத்தை சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த இளைஞன் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்கு பயணமாக இருந்த நிலையில்
ஐந்து தினங்களுக்கு முன்னர் கடந்த 19ஆம் திகதி முதல் காணாமல் போனார்.
காணாமல்போன மகனை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில்
உறவினர்களும் இளைஞனைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இளைஞனின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
இளைஞரின் சடலம் உடல் கூராய்வுக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்
கப்பட்டுள்ளது. அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment