யாழ்ப்பாணத்தில் நேற்று மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு பிறப்பிலேயே கை, கால்கள் செயற்பாடுகள் அற்று காணப்பட்டன. நேற்று காலை 10 மணியளவில் தனது வாயினால் மின்சார ஆழி குதையினுள் மின் இணைப்புக்காக வயரை செருக முற்படும்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
Leave a comment