Home தாயகச் செய்திகள் யாழில் போதை மாத்திரை விற்பனையாளரும் மற்றொருவரும் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் போதை மாத்திரை விற்பனையாளரும் மற்றொருவரும் கைது!

Share
Share

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் போதை மாத்திரை விற்பனையாளர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ். குற்றத் தடுப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

20 மற்றும் 22 வயதுடைய நபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 110 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வவுனியாவில் 43 பேருக்கு எயிட்ஸ்!

வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய்...

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...