Home தென்னிலங்கைச் செய்திகள் குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

Share
Share

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குருநாகல் – நாரம்மல லஹிட்டியாவ, ஹொரம்பாவ – மாவி எல வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி தொலைத்தொடர்பு கம்பத்துடன்
மோதி கவிழந்து விபத்துக்குள்ளாது.

இதன்போது, லொறியின் பின்புறத்தில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்த லொறியின் கீழ் அகப்பட்டனர்.

லொறியில் நசியுண்டு, படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக நாரம்மல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் இருவரும் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த 26, 29 வயதுடையவர்களாவர்.

இந்த லொறியில் ஐவர் பயணித்திருந்தனர். லொறியின் சாரதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த 49 வயதான நபர் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...