Home தென்னிலங்கைச் செய்திகள் வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

Share
Share

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

வீதி விபத்து தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைக்கும் போது அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், குறித்த விபத்துகள் ஏற்படாமல் தடுக்கக்கூடியவை என தெரிவித்த அவர், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பயனளிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியுடன் முன்நோக்கிச் செல்லும்போது, விபத்துகளைத் தடுப்பதற்கான செயற்பாடுகள் ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

விபத்து தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக விபத்துகள் மற்றும் மருத்துவமனைகளில் ஏற்படும் தாக்கங்களையும், குறைக்க முடியுமென சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...

வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராகச் செயற்படமாட்டோம் – அமைச்சர் லால் காந்த!

நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்படமாட்டோம் என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி...