Home தாயகச் செய்திகள் சட்டவிரோத மருந்து, அழகுசாதனப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மன்னாரில் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சட்டவிரோத மருந்து, அழகுசாதனப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மன்னாரில் கைது!

Share
Share

நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மருந்துகள், அழகு சாதனப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மன்னார் – கீரி கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 56 ஆயிரத்து 870 மருந்து மாத்திரைகள், அழகு சாதனப் பொருட்களும் இதன் போது கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர் தாழ்வுபாடு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மருந்துகள், அழகு சாதனப் பொருட்களுடன் சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினரால் யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...