Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிரணிகள் கூட்டு அரசியல் சமர் – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிரணிகள் கூட்டு அரசியல் சமர் – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

Share
Share

மாகாண சபைத் தேர்தலை விரைவில் பெறுவதற்குரிய எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் உக்கிரமாக முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாகவே மாகாண சபைத் தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டது. உயிர்த் தியாகங்களுக்கு மத்தியிலேயே இந்த முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, மாகாண சபை முறைமை அவசியம்.

மாகாண சபைத் தேர்தல் பற்றி எதிரணிகள் கதைக்கின்றனவா எனக் கேள்வி எழுப்பப்படுகின்றது.

இது பற்றி நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். மாகாண சபைகளின் கீழ் நிறைய பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளன. அந்த முறைமையில் ஜனாதிபதியின் எதேச்சதிகாரம் இருப்பதை அனுமதிக்க முடியாது. ஆகவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் வென்றெடுப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஜனநாயக வழியில் எல்லாவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...