Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிரணிகள் கூட்டு அரசியல் சமர் – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிரணிகள் கூட்டு அரசியல் சமர் – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

Share
Share

மாகாண சபைத் தேர்தலை விரைவில் பெறுவதற்குரிய எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் உக்கிரமாக முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாகவே மாகாண சபைத் தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டது. உயிர்த் தியாகங்களுக்கு மத்தியிலேயே இந்த முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, மாகாண சபை முறைமை அவசியம்.

மாகாண சபைத் தேர்தல் பற்றி எதிரணிகள் கதைக்கின்றனவா எனக் கேள்வி எழுப்பப்படுகின்றது.

இது பற்றி நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். மாகாண சபைகளின் கீழ் நிறைய பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளன. அந்த முறைமையில் ஜனாதிபதியின் எதேச்சதிகாரம் இருப்பதை அனுமதிக்க முடியாது. ஆகவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் வென்றெடுப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஜனநாயக வழியில் எல்லாவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...