Home தாயகச் செய்திகள் வடமராட்சியில் சட்டவிரோத ஜோதிட நிலையம்! இந்தியர்கள் மூவர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வடமராட்சியில் சட்டவிரோத ஜோதிட நிலையம்! இந்தியர்கள் மூவர் கைது!

Share
Share

சட்டவிரோதமாக ஜோதிட நிலையத்தை இயக்கிய இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை தும்பளை வீதியில் சட்டவிரோத ஜோதிட நிலையம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையத்தை இந்தியர்கள் மூவரே நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையம் தொடர்பாக தும்பளை பிரிதேச கிராம அலுவலர் பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும், நேற்று ஜோதிட நிலையம் இயங்கி வந்ததை அடுத்து நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இந்திய பிரஜைகளின் கடவுச் சீட்டை பரிசோதனை செய்
போது குறித்த மூவரும் சுற்றுலா வீஸாவில் நாட்டுக்குள் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த மூன்று இந்திய பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...