Home தாயகச் செய்திகள் வடமராட்சியில் சட்டவிரோத ஜோதிட நிலையம்! இந்தியர்கள் மூவர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வடமராட்சியில் சட்டவிரோத ஜோதிட நிலையம்! இந்தியர்கள் மூவர் கைது!

Share
Share

சட்டவிரோதமாக ஜோதிட நிலையத்தை இயக்கிய இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை தும்பளை வீதியில் சட்டவிரோத ஜோதிட நிலையம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையத்தை இந்தியர்கள் மூவரே நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையம் தொடர்பாக தும்பளை பிரிதேச கிராம அலுவலர் பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும், நேற்று ஜோதிட நிலையம் இயங்கி வந்ததை அடுத்து நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இந்திய பிரஜைகளின் கடவுச் சீட்டை பரிசோதனை செய்
போது குறித்த மூவரும் சுற்றுலா வீஸாவில் நாட்டுக்குள் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த மூன்று இந்திய பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...