Home தென்னிலங்கைச் செய்திகள் தாஜுதீன் கொலைக்கு முன்னாள் ஆட்சியாளர்களே காரணம் என்கிறது அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தாஜுதீன் கொலைக்கு முன்னாள் ஆட்சியாளர்களே காரணம் என்கிறது அரசாங்கம்!

Share
Share

“முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் உள்ள சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர்.” – இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“விசாரணைகளின்படி குற்றங்களில் தொடர்புடையவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டம் அமுல்படுத்தப்படும்.

இந்தக் குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தார்கள். அவர்கள் அன்று குற்றங்களை மூடி மறைத்தனர்.

வாசிம் தாஜுதீன் 2012இல் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் யாராயினும் சட்டம் செயற்படுத்தப்படும்.

இந்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளில் அரசு தலையிடாது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அதிக தொகை பணம்; சுன்னாகம் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம்!

சட்டவிரோதமான முறையில் பணத்தை ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு...

இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம்!

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் செவ்வாய்க்கிழமை (15) கொழும்புக்கு...

செம்மணி அகழ்வுப் பணிகளில் தாமதம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள...

தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51...