Home தென்னிலங்கைச் செய்திகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு அவசியம் – சட்டக் கல்லூரியின் முதல்வர் சுட்டிக்காட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு அவசியம் – சட்டக் கல்லூரியின் முதல்வர் சுட்டிக்காட்டு!

Share
Share

இலங்கையின் இயல்புகளைக் கருத்திற்கொள்ளும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மிகவும் அவசியமானது என்று இலங்கை சட்டக் கல்லூரியின் முதல்வர் பிரஷாந்த லால் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துடன் இணைந்த முறையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். இலங்கையின் அரசியல் வரலாற்றில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட இறுதி ஜனாதிபதியாக அநுரவே இருப்பார் என்று தேசிய மக்கள் சக்தி அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, இலங்கைக்கு நிறைவேற்று அதிகார முறைமை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சட்டக் கல்லூரியின் முதல்வர் பிரஷாந்த லால் டி அல்விஸ் இது தொடர்பில் ஊடங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பல்வேறு இனக்குழுக்களிடையே ஒற்றுமையைப் பேணுவதற்கும், வெளிநாட்டு செல்வாக்குகளைத் தடுப்பதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முக்கியமானது. எனவே, அதை இரத்துச் செய்வது தொடர்பில் சிந்திக்கக்கூடாது. அதேநேரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வருபவர்கள், அந்த அதிகாரத்தை நல்ல முறையில் பயன்படுத்துவது அவசியம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

வடக்கில் 80 ஆயிரம் வெடிபொருட்கள் அகற்றப்பட்டன!

வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி...