Home தென்னிலங்கைச் செய்திகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு அவசியம் – சட்டக் கல்லூரியின் முதல்வர் சுட்டிக்காட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு அவசியம் – சட்டக் கல்லூரியின் முதல்வர் சுட்டிக்காட்டு!

Share
Share

இலங்கையின் இயல்புகளைக் கருத்திற்கொள்ளும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மிகவும் அவசியமானது என்று இலங்கை சட்டக் கல்லூரியின் முதல்வர் பிரஷாந்த லால் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துடன் இணைந்த முறையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். இலங்கையின் அரசியல் வரலாற்றில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட இறுதி ஜனாதிபதியாக அநுரவே இருப்பார் என்று தேசிய மக்கள் சக்தி அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, இலங்கைக்கு நிறைவேற்று அதிகார முறைமை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சட்டக் கல்லூரியின் முதல்வர் பிரஷாந்த லால் டி அல்விஸ் இது தொடர்பில் ஊடங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பல்வேறு இனக்குழுக்களிடையே ஒற்றுமையைப் பேணுவதற்கும், வெளிநாட்டு செல்வாக்குகளைத் தடுப்பதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முக்கியமானது. எனவே, அதை இரத்துச் செய்வது தொடர்பில் சிந்திக்கக்கூடாது. அதேநேரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வருபவர்கள், அந்த அதிகாரத்தை நல்ல முறையில் பயன்படுத்துவது அவசியம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இணைய நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...