Home தென்னிலங்கைச் செய்திகள் மேல் மாகாணத்தில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் சிக்கின!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மேல் மாகாணத்தில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் சிக்கின!

Share
Share

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் சில பொருட்களை மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பேலியகொடை மீன் சந்தைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குப் பின்னால் உள்ள பகுதியில் இருந்து இந்தத் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள  பாதாள உலகக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே என்பவரை விசாரணைக்குட்படுத்திய பின்னர், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலக்கமைய இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த பகுதியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கிகள், ரி – 56 ரக துப்பாக்கி ரவைக் கூடுகள், சுயமாக இயக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் இராணுவச் சீருடைகள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன என்று மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...