Home தென்னிலங்கைச் செய்திகள் மேல் மாகாணத்தில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் சிக்கின!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மேல் மாகாணத்தில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் சிக்கின!

Share
Share

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் சில பொருட்களை மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பேலியகொடை மீன் சந்தைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குப் பின்னால் உள்ள பகுதியில் இருந்து இந்தத் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள  பாதாள உலகக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே என்பவரை விசாரணைக்குட்படுத்திய பின்னர், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலக்கமைய இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த பகுதியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கிகள், ரி – 56 ரக துப்பாக்கி ரவைக் கூடுகள், சுயமாக இயக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் இராணுவச் சீருடைகள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன என்று மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...