Home தென்னிலங்கைச் செய்திகள் போதைப் பொருளை விநியோகிப்பவர்கள் மொட்டுக்கட்சியினர் – அரசாங்கம் குற்றச்சாட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

போதைப் பொருளை விநியோகிப்பவர்கள் மொட்டுக்கட்சியினர் – அரசாங்கம் குற்றச்சாட்டு!

Share
Share

நீதிமன்ற உத்தரவில்லாமல் எமது அரசாங்கம் யாரையும் கைது செய்ததில்லை. பாதாளக் குழுக்களை போஷித்து அதன் மூலம் நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவந்து விநியோகிப்பவர்கள் மொட்டு கட்சியில் இருப்பவர்கள் என்பது நாட்டு மக்களுக்கு
தெரியும். அதனால் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டை எமது அரசாங்கத்தின் மீது சுமத்தி தப்பிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், நீதிமன்ற உத்தரவின்றி பொலிஸார், இராணுவத்தினர் என யாரையும் எமது அரசாங்கம் கைது செய்ததில்லை.

அதனால் இராணுவத்தினரை கைது செய்திருப்பதாக நாமல் எம்.பி. தெரிவித்த விடயத்தில் எந்த உண்மையும் இல்லை.

முன்னாள் கடற்படைத் தளபதி, அவர் புலனாய்வு பிரிவில் இருக்கும்போது செய்த ஒரு நடவடிக்கை காரணமாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதேபோன்று கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வரும் முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருளுடன் எமது அரசாங்கத்தை தொடர்புபடுத்த நாமல் முயற்சித்தார்.

ஆனால் போதைப்பொருளுடன் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் மனம்பேரி தொடர்புபட்டவர் என யாரும் அறிந்த விடயம்.

அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அவர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் இணைப்புச் செயலாளர்.

அதனால் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட பலர் மொட்டு கட்சியில் இருக்கின்றனர் என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...