Home தாயகச் செய்திகள் தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் நேரில் பேச தமிழரசுக்கட்சி முயற்சி! (கடிதம்)
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் நேரில் பேச தமிழரசுக்கட்சி முயற்சி! (கடிதம்)

Share
Share

தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை குறித்து நேரடியாகப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று கோரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.

‘தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு’ என்ற தலைப்பில் அமைந்த அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் வருமாறு:-

“நமது கட்சியின் சமீபத்திய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக உங்களுக்கு எழுத முடிவு செய்யப்பட்டது.

நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் ஆகின்றது. உங்கள் தேர்தல் அறிக்கையிலும் மற்றும் பல அறிவிப்புகளிலும் இந்த மிக முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பீர்கள் என நீங்கள் உறுதியளித்துள்ளீர்கள். இருப்பினும், கடந்த ஒரு வருடமாக இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முதன்மையான தமிழ் அரசியல் கட்சியாக, மேற்கூறிய பிரச்சினை தொடர்பாக உங்கள் அரசுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம். அந்தவகையில் உங்களைச் சந்திக்க கீழே கையொப்பமிடப்பட்ட தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் எங்கள் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட குழு உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் நேரத்தில் உங்களைச் சந்திக்க ஒரு நேரத்தை ஒதுக்தித் தருமாறு வேண்டுகின்றோம்.” – என்றுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...