Home தென்னிலங்கைச் செய்திகள் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்கவில் பெண் உட்பட இருவர் சிக்கினர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்கவில் பெண் உட்பட இருவர் சிக்கினர்!

Share
Share

சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகள், டெப் கணினிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிகரெட்டுக்களையும் கஞ்சாவையும் பொதி  செய்ய பயன்படுத்தப்படும் பெட்டிகளுடன் பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணும், 45 வயதுடைய பெண்ணும் ஆவர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வர்த்தகர்கள் ஆவர்.

சந்தேகநபர்கள் இருவரும் டுபாயில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கட்டுநாயக்க  விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளில் இருந்து 132 நவீன கையடக்கத் தொலைபேசிகள் , 14 டெப் கணினிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிகரெட்டுக்களையும் கஞ்சாவையும் பொதி செய்ய பயன்படுத்தப்படும் 1,700  பெட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களின் மொத்தப் பெறுமதி 50 இலட்சம் ரூபா என விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...