Home பிரதான செய்திகள் கோபா குழுவின் புதிய தலைவராக எதிரணி எம்.பி. கபீர் ஹாசிம் தெரிவு!
பிரதான செய்திகள்

கோபா குழுவின் புதிய தலைவராக எதிரணி எம்.பி. கபீர் ஹாசிம் தெரிவு!

Share
Share

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டார்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய  நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத்  2025.08.06ஆம் திகதியன்று அந்தப் பதவியை இராஜிநாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது.

தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமின் பெயரை  நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல  முன்மொழிந்ததுடன்  நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன   வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர்  கபீர் ஹாசிம், அரசியல் கருத்து வேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செயற்பட்டு சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், முன்னாள் தலைவர் நாடாளுமன்றஉறுப்பினர் அரவிந்த செனரத்  பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியைத் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் புதிய தலைவர் குறிப்பிட்டார்.

புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் புதிய தலைவர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...

தமிழரசுக்கட்சி தமிழ் மக்களை ஏமாற்றுகிறது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

தமிழ் மக்கள் நிராகரித்து இலங்கைத் தமிழரசு கட்சியே கைவிட்டதாகக் கூறிய ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது அந்த...

வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப் பத்திரங்கள் இல்லை!

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார்...

புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – தமிழரசுக்கட்சிக்கு ஜனாதிபதி தெரிவிப்பு!

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...