Home தென்னிலங்கைச் செய்திகள் விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேறும் மஹிந்த – தங்காலையில் வரவேற்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேறும் மஹிந்த – தங்காலையில் வரவேற்பு!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பு – விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை வெளியேறவுள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டதையடுத்து மஹிந்த ராஜபக்‌ஷ விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேற முடிவு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
அம்பாந்தோட்டை – தங்காலையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று மாலை 4 மணியளவில் மஹிந்த ராஜபக்‌ஷ செல்லவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
 
தங்காலையில், முன்னாள் ஜனாதிபதியை வரவேற்கும் விழா ஒன்றையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு திறமையில்லையேல் நாடே அழியும்! – நேபாளத்தின் நிலையை சுட்டிக்காட்டி ரணில் விசேட அறிக்கை!

“நேபாளத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமையான...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு...

வழக்குகள் தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை!

வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. ...

யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை – சபையில் கருணாதிலக!

“பல்வேறு காரணிகளால் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள்குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது....