Home தாயகச் செய்திகள் ஐ. நா. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகுகிறது இலங்கை?!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐ. நா. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகுகிறது இலங்கை?!

Share
Share

இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் பிரச்னைகள் தொடர்பில் ஒரு பொறிமுறையை கோரி, பிரிட்டன் தலைமையிலான நாடுகளின் முக்கிய குழு இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அதன் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை முன்வைக்கும்போது, வாக்கெடுப்பு கோருவதில்லை என்று இலங்கை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகியவை முக்கிய குழுவில் உள்ள ஏனைய உறுப்பு நாடுகள் ஆகும்.

இலங்கை இந்த ஆண்டு ஒரு புதிய தீர்மானத்தை எதிர்கொள்கிறது. அரசாங்கத்தின் சார்பாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று முன் தினம் ஜெனிவாவில் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

இலங்கை உள்நாட்டு பொறி முறையின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியைத் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரு நாடாக இலங்கை எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் எதிர்த்தாலும், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் பிரச்னைகளை கையாள்வதில் சர்வதேச சமூகத்தின் தொழில்நுட்ப உதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

செம்மணி மனித புதைகுழி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்வதில் இத்தகைய உதவி தேவைப்படலாம் என்று கருதப்படுகிறது.

முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் வரைவு இன்னும் ஜெனீவாவில் சுற்றுக்கு விடப்படவில்லை. தீர்மானத்தை முன்வைப்பதற்கு முன்னதாக, அதனுடன் நட்பு கொண்ட நாடுகளிடம், நல்லிணக்கத்தை நோக்கி அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவான உரைகளை நிகழ்த்துமாறு கோர இலங்கை திட்டமிட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...