Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் மரணம்!

Share
Share

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இரவு கடுகதி ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்திவெளி. ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வரதராஜா கிருஷ்ணகாந்தன் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் நேற்று சனிக்கிழமை இரவு மது போதையில் தண்டவாளத்தில் தலையை வைத்துத் தூங்கியதால் ரயில் மோதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின் இன்று காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொண்டு வரப்பட்டது.

விபத்து தொடர்பில் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...