Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பில் கத்திமுனையில் தாலிக்கொடி திருட்டு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் கத்திமுனையில் தாலிக்கொடி திருட்டு!

Share
Share

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் கத்திமுனையில் தாலிக்கொடி திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வயோதிப பெண்ணொருவரின் 16 பவுண் தாலிக்கொடியே திருடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்நுழைந்த நபர் ஒருவர் வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி 16 பவுண் தாலிக் கொடியை அறுத்துக் கொள்ளையடித்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த பெண்ணின் கணவரின் ஈருருளியையும் குறித்த நபர் களவாடிச் சென்றுள்ளார்.

கொக்குவில் காவல்துறைக்கு உட்பட்ட சின்ன ஊறணியில் வசித்து வரும் குறித்த பெண் ஓய்வுபெற்ற செவிலியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இணைய நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை...

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...