Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பில் கத்திமுனையில் தாலிக்கொடி திருட்டு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் கத்திமுனையில் தாலிக்கொடி திருட்டு!

Share
Share

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் கத்திமுனையில் தாலிக்கொடி திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வயோதிப பெண்ணொருவரின் 16 பவுண் தாலிக்கொடியே திருடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்நுழைந்த நபர் ஒருவர் வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி 16 பவுண் தாலிக் கொடியை அறுத்துக் கொள்ளையடித்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த பெண்ணின் கணவரின் ஈருருளியையும் குறித்த நபர் களவாடிச் சென்றுள்ளார்.

கொக்குவில் காவல்துறைக்கு உட்பட்ட சின்ன ஊறணியில் வசித்து வரும் குறித்த பெண் ஓய்வுபெற்ற செவிலியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...

பல்லாயிரக்கணக்கில் திரண்டு மக்கள் உன்னதர்களை நினைவேந்தினர்!

தமிழினத்தின் விடுதலைக்காக போராடி – களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை அஞ்சலிக்கும் மாவீரர்கள் நாள்...