Home தாயகச் செய்திகள் நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள்:வழக்குத் தீர்ப்பு ஒக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள்:வழக்குத் தீர்ப்பு ஒக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைப்பு!

Share
Share

யாழ். தென்மராட்சி, நாவற்குழிப் பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இராணுவத்தின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 24 பேர் தொடர்பான வழக்கு தீர்ப்புக்காக இன்று வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தவணையிடப்பட்ட போதிலும் நீதிவான் வருகை தராத காரணத்தால் மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி தீர்ப்புக்காகத் தவணையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி அம்பிகா சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழியில் இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பின் பின் காணாமல்போன 24 நபர்களில் மூன்று பேர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சில வருடங்களாக மூன்று வழக்குகளும் விசாரணைக்காக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று தற்போது தீர்ப்புக்காகத் தவணையிடப்பட்டுள்ளது.

இன்று நீதிவான் வருகை தராத காரணத்தால் மேற்படி வழக்கு தீர்ப்புக்காக எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...