Home தென்னிலங்கைச் செய்திகள் பட்டதாரிகளை பணிக்கமர்த்த நடவடிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பட்டதாரிகளை பணிக்கமர்த்த நடவடிக்கை!

Share
Share

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதத்துக்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 4 வழக்குகளின் நீதித்துறை நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்று கல்வி, உயர்
கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நீதித்துறை நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் உடனடியாக வர்த்தமானி வெளியிடப்படும். இதன்மூலம் பட்டதாரிகள், ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

வேலையற்ற பட்டதாரிகள் கூட்டுசங்கத்தின் பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

ஏற்கனவே, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி – தேவைக்கேற்ப ஏனைய பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அத்துடன், ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை
திருத்துவதற்கும் வயது வரம்பை நீட்டிப்பதற்கும் தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களுக்கும் உடனடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் இதன் போது இணக்கம் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...