Home தாயகச் செய்திகள் முதலாம் திகதி யாழில் கடவுச் சீட்டு அலுவலகம் திறப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

முதலாம் திகதி யாழில் கடவுச் சீட்டு அலுவலகம் திறப்பு!

Share
Share

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

70 மில்லியன் ரூபாய் செலவில் அலுவலக பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 

அதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதியின் பின்னர் வடக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தமக்கான கடவுச் சீட்டுக்களை யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் புதிய அலுவலகத்தினுடாகப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

அதற்கமைய, ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுடாக புதிய அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். 

முன்னதாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கடவுச் சீட்டுக்கான அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்தார். 

இதன்படி, யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய கடவுச் சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி திறந்து வைக்கவுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...