Home தென்னிலங்கைச் செய்திகள் தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்த ஜே.வி.பியினர் முயற்சி – சம்பிக்க குற்றச்சாட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்த ஜே.வி.பியினர் முயற்சி – சம்பிக்க குற்றச்சாட்டு!

Share
Share

“இலங்கையில் தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி. முயற்சித்து வருகின்றது. இதற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“1982 இல் அரச சொத்துகளுக்குக் கட்சியொன்று சேதம் விளைவித்ததால்தான், சட்ட நடவடிக்கையின் நிமித்தம் பொதுச் சொத்து சட்டம் கொண்டுவரப்பட்டது.

2022 இல் நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்காக வீதியில் இறங்கிய கட்சிதான், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கைது செய்துள்ளது.

தனிக்கட்சி முறைமையொன்றை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் அரசியல் சூழ்ச்சியின் மற்றுமொரு அங்கமே ரணில் விக்கிரமசிங்கவின் கைதாகும். எனவே, அரசியல் வேறுபாடுகள் இருப்பினும், ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துத் தரப்பினரும் இதற்கு எதிராக அணிதிரள வேண்டும்.

அவ்வாறு இல்லையேல் 1987 மற்றும் 1989 காலப்பகுதியில் அவர்களால் செய்ய முடியாமல்போன தனிக்கட்சி ஆட்சி முறைமையை உருவாக்குவதற்கு முற்படக்கூடும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...