Home தென்னிலங்கைச் செய்திகள் நாட்டில் மருந்துகளுக்கு பற்றாக்குறை – சுகாதார அமைச்சர்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நாட்டில் மருந்துகளுக்கு பற்றாக்குறை – சுகாதார அமைச்சர்!

Share
Share

கடந்த அரசாங்கத்தில் முறையான விலைமனுக்கோரல் முறைக்கு அப்பால் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதால் நாட்டில் தற்போது சில மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டிருந்தால் மருந்துகள் உரிய முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம் தற்போதைய மருந்து பற்றாக்குறையை சமாளிப்பதற்கு பிராந்திய கொள்முதல்களுக்காக மருத்துவமனைகளுக்கு 3,500 மில்லியன் ருபாய் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுவதுடன், சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இணக்கங்களும் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...