Home தாயகச் செய்திகள் சுண்டிக்குளத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த கடற்றொழிலாளி படுகொலை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுண்டிக்குளத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த கடற்றொழிலாளி படுகொலை!

Share
Share

வாள் வெட்டுச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் சின்னத்தம்பி வடிவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கு , சுண்டிக்குளம் பகுதியில் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் வாடி அமைத்து கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாடியில் இருந்த இரு கடற்றொழிலாளர்களுக்கிடையில் கருத்து மோதல் ஏற்பட்டு வாள் வெட்டில் முடிந்தது.

அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழ்த் தேசியப் பிரச்சினையை முறையாகக் கையாளும் திருப்புமுனைத் தீர்மானம் ஜெனிவாவில் மிக அவசியம் – உறுப்பு நாடுகளுக்கு தமிழரசுக் கட்சி கடிதம்!

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் வரவிருக்கும் அறுபதாவது கூட்டத் தொடர் அமர்வில் இலங்கை தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட...

கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் – நீதிமன்றில் சி.ஐ.டி. தெரிவிப்பு!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  அதிகாரிகள்...

யாழ். வரும் ஜனாதிபதி செம்மணிப் புதைகுழியை நேரில் பார்வையிடலாம் – அமைச்சர் சந்திரசேகர் தகவல்!

வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, செம்மணி...

குளியாப்பிட்டியில் கோர விபத்து! மாணவர்கள் இருவர் உட்பட மூவர் பலி!!

குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியில் பல்லேவல பாலத்துக்கருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை...