Home தாயகச் செய்திகள் சுண்டிக்குளத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த கடற்றொழிலாளி படுகொலை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுண்டிக்குளத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த கடற்றொழிலாளி படுகொலை!

Share
Share

வாள் வெட்டுச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் சின்னத்தம்பி வடிவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கு , சுண்டிக்குளம் பகுதியில் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் வாடி அமைத்து கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாடியில் இருந்த இரு கடற்றொழிலாளர்களுக்கிடையில் கருத்து மோதல் ஏற்பட்டு வாள் வெட்டில் முடிந்தது.

அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...