Home தாயகச் செய்திகள் யாழில் திடீரென நிறுத்தப்பட்ட இசை நிகழ்வு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் திடீரென நிறுத்தப்பட்ட இசை நிகழ்வு!

Share
Share

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த இசை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று மாலை மாபெரும் இசை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

“யாழ் . மண்ணே வணக்கம்” எனும் இசை நிகழ்வில், தென்னிந்திய பிரபல பாடகர்களான மனோ, சைந்தவி, கார்த்திக், தீப்தீ, இசையமைப்பாளர் சிற்பி ஆகியோர் கலந்துகொள்ளவிருந்தனர்

இசை நிகழ்வுக்காகச் சில கலைஞர்கள் தென்னிந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நிலையில், திடீரென இசை நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்வுக்காக 10 ஆயிரம் ரூபா, 5 ஆயிரம் ரூபா, 3ஆயிரம் ரூபா மற்றும் 1500 ரூபா ஆகிய விலைகளில் நுழைவுச்சீட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது என்றும், நிகழ்வு பிறிதொரு தினத்தில் நடத்தப்படும் என்றும், அதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழ். வரும் ஜனாதிபதி செம்மணிப் புதைகுழியை நேரில் பார்வையிடலாம் – அமைச்சர் சந்திரசேகர் தகவல்!

வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, செம்மணி...

குளியாப்பிட்டியில் கோர விபத்து! மாணவர்கள் இருவர் உட்பட மூவர் பலி!!

குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியில் பல்லேவல பாலத்துக்கருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை...

தென்னக்கோனுக்கு பிணை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்...

ரணில் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்கிறது அரசாங்கம்!

பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது குற்றம் எனவும் அதற்காக கைதுசெய்யப்படுவது அரசியல் பழிவாங்கலாக அமையாது எனவும்...