Home தாயகச் செய்திகள் யாழில் வீடு ஒன்றிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யாழில் வீடு ஒன்றிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் வளவில் இருந்து நேற்று பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொட்டடிப் பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்துக்கு குழி வெட்டியபோது, சந்தேகத்துக்கு இடமான பொதி காணப்பட்டமையால், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பொலிஸார் வந்து பொதியைப் பார்வையிட்ட பின்னர், அது தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்து, அகழ்வுப் பணிக்கு அனுமதி பெற்றனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள்முன்னெடுக்கப் பட்டு பொதிகள் மீட்கப்பட்டன.

குறித்த பொதிகளில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் 30 மற்றும் அவற்றுக்குரிய 05ஆயிரம் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கல்முனை மாநகர சபை ஊழியர் இ.போ.ச. பஸ் மோதி உயிரிழப்பு!

கல்முனை மாநகர சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் டேவிட் பாஸ்கரன் (வயது 56) வீதி விபத்தில் சிக்கி...

வவுனியாவில் இ.போ.ச பேருந்து சேவை புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து...

வாகன விபத்துக்களால் இந்த ஆண்டில் 1778 பேர் மரணம்!

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை, மரணங்களை ஏற்படுத்திய 1,682 வாகன விபத்துகள்...

தமிழ்த் தேசியப் பிரச்சினையை முறையாகக் கையாளும் திருப்புமுனைத் தீர்மானம் ஜெனிவாவில் மிக அவசியம் – உறுப்பு நாடுகளுக்கு தமிழரசுக் கட்சி கடிதம்!

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் வரவிருக்கும் அறுபதாவது கூட்டத் தொடர் அமர்வில் இலங்கை தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட...