Home தாயகச் செய்திகள் யாழில் வீடு ஒன்றிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யாழில் வீடு ஒன்றிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் வளவில் இருந்து நேற்று பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொட்டடிப் பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்துக்கு குழி வெட்டியபோது, சந்தேகத்துக்கு இடமான பொதி காணப்பட்டமையால், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பொலிஸார் வந்து பொதியைப் பார்வையிட்ட பின்னர், அது தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்து, அகழ்வுப் பணிக்கு அனுமதி பெற்றனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள்முன்னெடுக்கப் பட்டு பொதிகள் மீட்கப்பட்டன.

குறித்த பொதிகளில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் 30 மற்றும் அவற்றுக்குரிய 05ஆயிரம் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...