Home தென்னிலங்கைச் செய்திகள் தமிழ் ஊடகர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்கு முறையைக் கண்டித்துப் போராட்டம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தமிழ் ஊடகர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்கு முறையைக் கண்டித்துப் போராட்டம்!

Share
Share

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்குமுறையைக் கண்டித்து நாடாளுமன்றச் சுற்றுவட்டத்துக்கு முன்பாக இன்று முற்பகல் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்தன.

முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். இதனைக் கண்டித்தும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்குமுறையைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெவ்வேறு இடங்களில் யானைகள் தாக்கிபெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபச் சாவு!

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்....

மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் பொலிஸ் அடாவடி!

யாழ். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிக்கச் சென்ற ஜனாதிபதி...

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணி இன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

குடிவரவு – குடியல்வுத் திணைக்களம் யாழில் திறக்கப்பட்டது!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில்...