Home தென்னிலங்கைச் செய்திகள் வெப்பநிலை அதிகரிப்புத் தொடர்பில் எச்சரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வெப்பநிலை அதிகரிப்புத் தொடர்பில் எச்சரிக்கை!

Share
Share

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளைய தினம் கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, வட, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவில் வெப்பநிலை காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த மாகாணங்களில் உள்ள மக்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகுவதுடன், வயதானவர்கள் மற்றும் நோயாளர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், வட, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தலைமன்னாரில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!

தலைமன்னாரில் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அந்தச்...

ரணில் – சஜித் அணிகள் இணைந்து செயற்பட முடிவு – வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

ஆரம்பப் பேச்சுகளின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

தேவைப்பட்டால் உரிய நேரத்தில் நாடாளுமன்றம் வருவார் ரணில் – ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேவைப்பட்டால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார் என்று...

இலங்கைக்கு கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள்...