Share

நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இதுவரை கண்டுபிடிக்க முடியாமையால் நீதிமன்ற அதிகாரிகள் குழுவினர், மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் இன்று சென்று அறிவித்தலை ஒட்டியுள்ளனர். 

நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவித்து குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. 

அத்தோடு, குறித்த அழைப்பாணை தொடர்பாக அவரது வீட்டிற்கு முன்னால் ஒலிப்பெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்தியதால் அரசுக்கு 262 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. 

அந்த மனுவின் சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. 

இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூடு: மூன்று சந்தேகநபர்கள் சிக்கினார்கள்!

இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை புதிய அரசமைப்பு மூலம் நிச்சயம் நீக்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். புதிய அரசமைப்பில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்ட...

மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றுக்கு சீல்!

மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை...

யாழில் வாள்வெட்டுச் சம்பவம்; ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில், இளைஞர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று...