Home தாயகச் செய்திகள் பாம்பு தீண்டி யாழில் இளைஞர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாம்பு தீண்டி யாழில் இளைஞர் மரணம்!

Share
Share

இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்
பாம்பு தீண்டி உயிரிழந்தார்.

புத்தூர் மேற்கில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்பவரே உயிரிழந்தார்.

குறித்த இளைஞர், அயலிலுள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சென்றிருந்தார். அவர் வீடு திரும்பாத நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் மகனைத் தேடி தாயார் சென்றுள்ளார்.

வீட்டுக்கு வரும் ஒழுங்கையில் மகன் விழுந்த நிலையில் கிடப்பதைக் கண்டார். இதையடுத்து, உறவினர்கள் இளைஞரை அச்சுவேலி பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். சடலம் உடல்கூராய்வுக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது, அவர் பாம்பு தீண்டி உயிரிழந்தார் என்று உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாட்டில் வாழ்வோருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் விரிவுபடுத்தப்பட்டது!

வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி...

சிறிதரன் எம்பியின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனிடம் கையளிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...