Home தாயகச் செய்திகள் பாம்பு தீண்டி யாழில் இளைஞர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாம்பு தீண்டி யாழில் இளைஞர் மரணம்!

Share
Share

இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்
பாம்பு தீண்டி உயிரிழந்தார்.

புத்தூர் மேற்கில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்பவரே உயிரிழந்தார்.

குறித்த இளைஞர், அயலிலுள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சென்றிருந்தார். அவர் வீடு திரும்பாத நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் மகனைத் தேடி தாயார் சென்றுள்ளார்.

வீட்டுக்கு வரும் ஒழுங்கையில் மகன் விழுந்த நிலையில் கிடப்பதைக் கண்டார். இதையடுத்து, உறவினர்கள் இளைஞரை அச்சுவேலி பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். சடலம் உடல்கூராய்வுக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது, அவர் பாம்பு தீண்டி உயிரிழந்தார் என்று உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...