Home தாயகச் செய்திகள் பாம்பு தீண்டி யாழில் இளைஞர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாம்பு தீண்டி யாழில் இளைஞர் மரணம்!

Share
Share

இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்
பாம்பு தீண்டி உயிரிழந்தார்.

புத்தூர் மேற்கில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்பவரே உயிரிழந்தார்.

குறித்த இளைஞர், அயலிலுள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சென்றிருந்தார். அவர் வீடு திரும்பாத நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் மகனைத் தேடி தாயார் சென்றுள்ளார்.

வீட்டுக்கு வரும் ஒழுங்கையில் மகன் விழுந்த நிலையில் கிடப்பதைக் கண்டார். இதையடுத்து, உறவினர்கள் இளைஞரை அச்சுவேலி பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். சடலம் உடல்கூராய்வுக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது, அவர் பாம்பு தீண்டி உயிரிழந்தார் என்று உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சட்டமூலம் நிறைவேறியதும் உத்தியோகபூர்வத்திலிருந்து மஹிந்த வெளியேறுவார் – நாமல் தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச...

சித்துப்பாத்தி புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏழு பேர் பணி இடைநிறுத்தம்!

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்ஏழு பேர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார...

சந்திரசேன பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான்...