Share

அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீதிமன்றில் ஆஜரானதையடுத்துப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட குற்றத்துக்காக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை மீண்டும் அழைக்கப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார்.

இதனால் அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், நாமல் ராஜபக்ஷ நேற்று காலை திருமண நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக மாலைதீவுக்குச் சென்றிருந்த மையால் இன்று மீண்டும் நாடு திரும்பி பிடியாணை உத்தரவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்து அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்துப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து?

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வது தொடர்பான சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...

மூன்று வருடங்களில் மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இடைவிலகல்!

கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த மூன்று வருடங்களில் மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இடைவிலகினர் என்று கல்வி,...

பாம்பு தீண்டி யாழில் இளைஞர் மரணம்!

இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்பாம்பு தீண்டி உயிரிழந்தார். புத்தூர் மேற்கில்...

சம்பூரில் மனித என்பு எச்சங்கள்: அகழ்வு செய்வதா? இல்லையா? ஓகஸ்ட் 6 ஆம் திகதி விசேட கூட்டம் – மூதூர் நீதிமன்றம் இன்று தீர்மானம்!

திருகோணமலை, சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதைத்...