Home தாயகச் செய்திகள் மாவை சேனாதிராஜாவின் 6 ஆம் மாத நினைவஞ்சலி! (படங்கள்)
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் 6 ஆம் மாத நினைவஞ்சலி! (படங்கள்)

Share
Share

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். சங்கானை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

தந்தை செல்வா நற்பணி மன்றமும் வட்டுக்கோட்டை பகுதி மக்களும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரைகள் ஆற்றப்பட்டன. பின்னர் குடும்பத்தினருக்கான நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மறைந்த மாவை சோ.சேனாதிராஜாவின் புதல்வன் மா.கலையமுதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா. குகதாஸ், திரு.கஜதீபன், யாழ். மாநகர சபையின் உறுப்பினர் ப.தர்ஷானந், தந்தை செல்வாவின் பேரன் இளங்கோவன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி ஐ.நாகரஞ்சினி, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சர்வேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், தந்தை செல்வா நற்பணி மன்றத்தினர், போராளிகள், நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – உதய கம்மன்பில!

“அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். எனவே, எதிரணிகள் ஓரணியில் திரண்டால்...

நல்லூர் கந்தன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! (படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக்...

நாமலுக்குப் பிணை!

அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை...

சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் கொலை – யாழ்ப்பாணத்தில் பரபரப்பு!

யாழ்ப்பாணத்தில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம்...