Home தாயகச் செய்திகள் வவுனியா ஏ – 9 வீதியில் மோ. சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வவுனியா ஏ – 9 வீதியில் மோ. சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!

Share
Share

வவுனியா, பரசங்குளம் ஏ – 9 வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் பரசங்குளம் பகுதியில் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான கிளிநொச்சி, பாரதிபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெயசீலன் திவாகரன் பலியாகியாள்ளர்.

சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சம்பூரில் மனித என்பு எச்சங்கள்: அகழ்வு செய்வதா? இல்லையா? ஓகஸ்ட் 6 ஆம் திகதி விசேட கூட்டம் – மூதூர் நீதிமன்றம் இன்று தீர்மானம்!

திருகோணமலை, சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதைத்...

கொள்ளையர் சங்கிலியை அறுத்தபோது படுகாயமுற்ற வயோதிப மாது உயிரிழப்பு – மட்டு நகர் நல்லையா வீதியில் சம்பவம்!

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில்...

சிறிய எலும்புக் கூட்டுத் தொகுதியை அணைத்தபடி பெரிய எலும்புக் கூட்டுத் தொகுதி மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்...

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர் தொடர்பான வழக்கு:ஓகஸ்ட் 28 ஆம் திகதி தீர்ப்பு!

யாழ். நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 22 பேர்...