Home தாயகச் செய்திகள் மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரிப்பு!

Share
Share

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 22 ஆவது நாளாகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. குறித்த அகழ்வு பணிகள் இன்று மதியம் 12.30 வரை மாத்திரம் முன்னெடுக்கப்பட்டன.

அதன்போது, புதிதாக எலும்புக்கூடுகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி பூரணி மரியநாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதன்படி,

ஏற்கனவே – கண்டுபிடிக்கப்பட்ட 05 எலும்புக்கூடுகள் தொகுதிகள் மாத்திரம் இன்றைய தினம் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, கண்டுபிடிக்கப்பட்ட 101 மனித எலும்புக்கூடுகளில், 95 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்ட நிலையில், சில எலும்புக்கூடுகள் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை மேலதிக நடவடிக்கைக்காக சட்டவைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்தநிலையில், இன்றைய நாளுக்கான அகழ்வுப்பணிகள் இன்று மதியத்துடன், நிறுத்தப்பட்டதுடன், மீண்டும் நாளைய தினம் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் எனவும் பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

எந்தத் தடை வரினும் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படும் – பிரதமர் ஹரிணி உறுதி!

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எதுவும் மறைக்கப்படாது. எந்தத் தடைகள் வந்தாலும் விசாரணைகள்...

செம்மணியில் மேலும் 03 எலும்புக் கூட்டுத் தொகுதிகள்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று திங்கட்கிழமை புதிதாக 03...

இரண்டு வாரங்களாக யாழில் மாணவியைக் காணவில்லை!

பாடசாலைக்கு சகோதரனை ஏற்றச் சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக தாயார்யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம்,...

மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துமாறு பவ்ரல் வலியுறுத்தல்!

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு சுதந்திரமான மற்றும்...