Home தாயகச் செய்திகள் தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகத்தில் பெரும் போராட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகத்தில் பெரும் போராட்டம்!

Share
Share

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக்குச் சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்று கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையில் மனித குலத்துக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள்  தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படும் இலங்கை  தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.  

வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டங்களில், ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக்குப் பன்னாட்டு நீதிப் பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும், இனப் படுகொலைகளுக்கான நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படாமல் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும், தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட பன்னாட்டுக் குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்க வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைச் சர்வதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும், தமிழின அழிப்பு நடந்ததைச்  சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும், செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பன்னாட்டுத் தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும், தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நில ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்த வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலைச் சட்டத்தை இரத்துச் செய்ய இலங்கை அரசுக்குப் பன்னாட்டு சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளைப் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

இதேவேளை, பன்னாட்டு நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி கையெழுத்தும் திரட்டப்பட்டது.

இந்தப் போராட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையைக் கோரி வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக இன்று கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணியில் பொலித்தீன் பை அடையாளம் – எலும்புக் குவியல்கள் இருப்பதாகச் சந்தேகம்!

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்...

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணியில் உறவுகள் போராட்டம்!

இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், செம்மணி...

கஜேந்திரகுமார் நினைப்பது போல் தமிழரசுக் கட்சி செயற்படாது! – சி.வி.கே.!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முடிந்து விடும் வேலையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு !

“புதிய அரசமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்.”...