Home தாயகச் செய்திகள் வன்னியில் தாயும் பிள்ளைகள் இருவரும் சடலங்களாக மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வன்னியில் தாயும் பிள்ளைகள் இருவரும் சடலங்களாக மீட்பு!

Share
Share

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து தாயும் பிள்ளைகள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த உஷாகரன் மாலினி (வயது 38) என்பவரும் அவருடைய 11 மற்றும் 04 வயதுகளையுடைய பிள்ளைகளே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் வீட்டிலிருந்து 400 மீற்றர் தொலைவில் உள்ள கிணறு ஒன்றிற்கு அருகில் சில பொருட்கள் காணப்பட்டமையை அந்தக் கிராமத்து மக்கள் அவதானித்து பின்னர் கிணற்றினுள் சடலங்களை கண்டிருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிராம அலுவலருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் பின்னர் சம்மந்தப்பட்டவர்களும் மாவட்ட நீதிபதியும் சடலங்களைப் பார்வையிட்டுள்ளனர்.

அதன் பின்னர்,

சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...