Home தாயகச் செய்திகள் வன்னியில் தாயும் பிள்ளைகள் இருவரும் சடலங்களாக மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வன்னியில் தாயும் பிள்ளைகள் இருவரும் சடலங்களாக மீட்பு!

Share
Share

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து தாயும் பிள்ளைகள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த உஷாகரன் மாலினி (வயது 38) என்பவரும் அவருடைய 11 மற்றும் 04 வயதுகளையுடைய பிள்ளைகளே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் வீட்டிலிருந்து 400 மீற்றர் தொலைவில் உள்ள கிணறு ஒன்றிற்கு அருகில் சில பொருட்கள் காணப்பட்டமையை அந்தக் கிராமத்து மக்கள் அவதானித்து பின்னர் கிணற்றினுள் சடலங்களை கண்டிருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிராம அலுவலருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் பின்னர் சம்மந்தப்பட்டவர்களும் மாவட்ட நீதிபதியும் சடலங்களைப் பார்வையிட்டுள்ளனர்.

அதன் பின்னர்,

சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணியில் உறவுகள் போராட்டம்!

இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், செம்மணி...

கஜேந்திரகுமார் நினைப்பது போல் தமிழரசுக் கட்சி செயற்படாது! – சி.வி.கே.!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முடிந்து விடும் வேலையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு !

“புதிய அரசமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்.”...

நெடுந்தீவுக் கடலில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் ஓகஸ்ட் 06 வரை மறியல் நீடிப்பு!

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும்...