Home தாயகச் செய்திகள் பால் போத்தலுடன் எட்டு எலும்புக் கூடுகள் இன்று மீட்பு! அவற்றில் பல சிறார்களுடையவை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பால் போத்தலுடன் எட்டு எலும்புக் கூடுகள் இன்று மீட்பு! அவற்றில் பல சிறார்களுடையவை!

Share
Share

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 2 ஆம் கட்டத்தின் 17ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.

அந்தவகையில், இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.

எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன .

குழந்தைகள் அருந்தும் பால் போச்சி ஒன்றும், ஆடையை ஒத்த சில துணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..

இன்றைய கண்டுபிடிப்புகளுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ரணில் ஆட்சிக் கால அவசரகால தடைச் சட்டங்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் விதிக்கப்பட்ட அவசரகால தடைச்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழில் இன்று கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை 1983 படுகொலையின் 42...

பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீடிப்பு!

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர்...

குரங்கு கடித்து மட்டக்களப்பில் பெண்கள் ஆறு பேருக்கு காயம்!

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேச குடிமனைப் பகுதிக்குள் உள்நுழைந்த குரங்குக் கூட்டம்  பெண்கள் மீது கடித்ததில் 6...