Home தாயகச் செய்திகள் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி கொழும்பில் துப்பாக்கியுடன் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி கொழும்பில் துப்பாக்கியுடன் கைது!

Share
Share

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான ரமேஷ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து ரி – 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் மேற்படி நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்தார் என்று பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளைப் பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...