Home தென்னிலங்கைச் செய்திகள் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 25 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 25 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில்!

Share
Share

கேகாலையில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் கேகாலை மற்றும் வரக்காப்பொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இளையோர் சுகநலக் கண்காட்சியும் விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வும்!

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள்...

ஓகஸ்ட் 10 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 10...

அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல்!

மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குஉத்தேசிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 3...

செம்மணியில் இன்று 07 எலும்புக்கூடுகள் அடையாளம்! இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....