Home தென்னிலங்கைச் செய்திகள் இளைஞர்கள் இருவர் வாவியில் மூழ்கி பலி!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இளைஞர்கள் இருவர் வாவியில் மூழ்கி பலி!

Share
Share

வாவியில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டம், உடவளவையில் உள்ள பனாக்கடுவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மற்றைய நபரின் சடலத்தைத் தேடும் நடவடிக்கை தொடர்கின்றது.

29 மற்றும் 30 வயதுடைய இருவரும் பனஹடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இருவரும் நீரில் மூழ்கியதை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மற்றும் இலங்கை இராணுவத்தின் உயிர்காக்கும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இதன்போது ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மற்றைய நபரின் சடலத்தைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இளையோர் சுகநலக் கண்காட்சியும் விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வும்!

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள்...

ஓகஸ்ட் 10 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 10...

அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல்!

மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குஉத்தேசிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 3...

செம்மணியில் இன்று 07 எலும்புக்கூடுகள் அடையாளம்! இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....