யாழ். நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்ற 29 வயது இளைஞரே இந்தச் சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உதைப்பந்தாட்டம் விளையாடிய இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிசை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Leave a comment