Home தென்னிலங்கைச் செய்திகள் சர்வதேச சட்டத்துக்கமைய கச்சதீவு இலங்கைக்குக் கிடைத்தது – மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதில்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சர்வதேச சட்டத்துக்கமைய கச்சதீவு இலங்கைக்குக் கிடைத்தது – மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதில்!

Share
Share

“இலங்கையில் மின்சாரக் கதிரை கதை கூறி ராஜபக்ஷக்கள் அரசியல் நடத்தியது போல் தமிழக முதலமைச்சர் கச்சதீவு விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளார். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சதீவு இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றுவிட்டது. அது இலங்கைக்கு உரித்தானது.” இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“கச்சதீவு விவகாரம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் தமிழகத்தில் எழும் பிரச்சினைகளைத் திசைதிருப்புவதற்காக இந்த விவகாரம் பயன்படுத்தப்படலாம்.

தமிழக முதலமைச்சருக்கு மஹிந்த ராஜபக்ஷ போல் மின்சாரக் கதிரையை வைத்து அரசியல் நடத்தும் சூழ்நிலை இல்லை. எனவே, தமிழக முதலமைச்சர் உட்பட தமிழகத் தலைவர்கள் கச்சதீவு விவகாரத்தை அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றனர்.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சதீவு இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றுவிட்டது. அது இலங்கைக்கு உரித்தானது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வட்டுக்கோட்டை வன்முறை; நடந்தது என்ன? (படங்கள்)

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்துப்...

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையேயான மோதலே துப்பாக்கிச்சூடுகளுக்குக் காரணம் – அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிப்பு!

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையிலான மோதல்களே தொடர்ச்சியான  துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என்று பொதுமக்கள்...

நாளை கூடும் நாடாளுமன்றம் – வெள்ளி வரை அமர்வுகள்!

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது. நாடளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும்...

செம்மணி மனிதப் புதைகுழியில் மீண்டும் இன்று முதல் அகழ்வு!

இடைநிறுத்தப்பட்ட யாழ். செம்மணி  மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட  அகழ்வுப்ப ணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன....