Home தென்னிலங்கைச் செய்திகள் சர்வதேச சட்டத்துக்கமைய கச்சதீவு இலங்கைக்குக் கிடைத்தது – மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதில்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சர்வதேச சட்டத்துக்கமைய கச்சதீவு இலங்கைக்குக் கிடைத்தது – மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதில்!

Share
Share

“இலங்கையில் மின்சாரக் கதிரை கதை கூறி ராஜபக்ஷக்கள் அரசியல் நடத்தியது போல் தமிழக முதலமைச்சர் கச்சதீவு விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளார். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சதீவு இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றுவிட்டது. அது இலங்கைக்கு உரித்தானது.” இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“கச்சதீவு விவகாரம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் தமிழகத்தில் எழும் பிரச்சினைகளைத் திசைதிருப்புவதற்காக இந்த விவகாரம் பயன்படுத்தப்படலாம்.

தமிழக முதலமைச்சருக்கு மஹிந்த ராஜபக்ஷ போல் மின்சாரக் கதிரையை வைத்து அரசியல் நடத்தும் சூழ்நிலை இல்லை. எனவே, தமிழக முதலமைச்சர் உட்பட தமிழகத் தலைவர்கள் கச்சதீவு விவகாரத்தை அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றனர்.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சதீவு இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றுவிட்டது. அது இலங்கைக்கு உரித்தானது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...