Home தென்னிலங்கைச் செய்திகள் கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Share
Share

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்பிராந்தியங்கள், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குக் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அத்துடன், தற்போதைய மோசமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, கடலுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அனைத்து கடற்றொழில் சமூகத்தினரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும், புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையான கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

கடற்பகுதிகளில் கடலலையானது, 2.5 முதல் 3 மீற்றர் வரையில் மேல் எழக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேச சட்டத்துக்கமைய கச்சதீவு இலங்கைக்குக் கிடைத்தது – மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதில்!

“இலங்கையில் மின்சாரக் கதிரை கதை கூறி ராஜபக்ஷக்கள் அரசியல் நடத்தியது போல் தமிழக முதலமைச்சர் கச்சதீவு...

வட்டுக்கோட்டையில் குழு மோதல்! இருவர் காயம்! இருவர் கைது!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் காரணமாக ஏற்பட்ட பதற்றநிலை கட்டுக்குள் கொண்டு...

பிள்ளையான் தொடர்பான விடயங்கள் நீதிமன்றுக்கு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என...

சம்பூரிலும் மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்?

திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித...