Home தென்னிலங்கைச் செய்திகள் வைத்தியர் மகேஷி பிணையில் விடுவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வைத்தியர் மகேஷி பிணையில் விடுவிப்பு!

Share
Share

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இன்று செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்டுள்ளார்.

வைத்தியர் மகேஷி விஜேரத்ன கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வைத்தியர் மகேஷி விஜேரத்னவை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மருந்துகளை மூன்றாம் தரப்பின் ஊடாக அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழ். பிரதேசத்தில் 1996 – 97 இல் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விசாரணை அறிக்கை கிட்டியது!

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஜூலை 21 ஆம் திகதி மீள ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம்...

போர்க்கால அறிவிப்பாளர் சத்தியாவின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்)...

வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து தடை!

வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16.07.2025) காலை...