Home தாயகச் செய்திகள் எழுவைதீவில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

எழுவைதீவில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!

Share
Share

யாழ்ப்பாணம் – எழுவைதீவு கடற்பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான, கேரள கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியை, சோதனையிட்டபோது, அதிலிருந்து சுமார் 38 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

எழுவைதீவு பகுதியில் கடற்படை கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதால், கடத்தல்காரர்கள் இந்த போதைப்பொருளைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, ஊர்காவற்துறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...