Home தாயகச் செய்திகள் எழுவைதீவில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

எழுவைதீவில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!

Share
Share

யாழ்ப்பாணம் – எழுவைதீவு கடற்பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான, கேரள கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியை, சோதனையிட்டபோது, அதிலிருந்து சுமார் 38 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

எழுவைதீவு பகுதியில் கடற்படை கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதால், கடத்தல்காரர்கள் இந்த போதைப்பொருளைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, ஊர்காவற்துறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது – பிரதமர் ஹரிணி!

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது எனவும், அந்த முறைமை...

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!

“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்...

தேடப்பட்டுவரும் செவ்வந்தியின் தாய் சிறையில் மரணம்!

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின்...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறியதமிழக மீனவர்கள் எழுவர் கைது!

தமிழக மீனவர்கள் 7 பேர் யாழ். கடற்பரப்பில் ஒரு படகுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது...