Home தாயகச் செய்திகள் விடுதலைப்புலிகளின் தங்கம் தேடி அகழ்வு! கிடைத்தது தகரம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

விடுதலைப்புலிகளின் தங்கம் தேடி அகழ்வு! கிடைத்தது தகரம்!

Share
Share

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தினார் என்று கூறப்படும் பதுங்கு குழியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் தகரங்கள் மட்டுமே கிடைத்தன. இதைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு இடைநிறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – 8ஆம் வட்டாரம்மந்துவில் கிராமத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள காணியை போர் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருந்தனர்.

இந்தக் காணியிலுள்ள நிலக்கீழ் பதுங்கு குழியை தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகள்
பயன்படுத்தியிருந்தனர் என்று கூறப்படுகிறது.

இந்தப் பதுங்கு குழியில் தங்கம் அல்லது ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, பதுங்கு குழியை அகழ்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் சுமார் 20 அடி ஆழமான குழியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன் பார்வையிட்டிருந்தார்.

அவரின் கட்டளையின் பேரில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணி தொடக்கம் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டது. பிற்பகல் 4.30 மணி வரை தொடர்ந்த ஆய்வில் தகரங்கள் சில மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அகழ்வு பணியை இடைநிறுத்துவதற்குநீதிபதி உத்தரவிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...