Home தாயகச் செய்திகள் விடுதலைப்புலிகளின் தங்கம் தேடி அகழ்வு! கிடைத்தது தகரம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

விடுதலைப்புலிகளின் தங்கம் தேடி அகழ்வு! கிடைத்தது தகரம்!

Share
Share

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தினார் என்று கூறப்படும் பதுங்கு குழியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் தகரங்கள் மட்டுமே கிடைத்தன. இதைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு இடைநிறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – 8ஆம் வட்டாரம்மந்துவில் கிராமத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள காணியை போர் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருந்தனர்.

இந்தக் காணியிலுள்ள நிலக்கீழ் பதுங்கு குழியை தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகள்
பயன்படுத்தியிருந்தனர் என்று கூறப்படுகிறது.

இந்தப் பதுங்கு குழியில் தங்கம் அல்லது ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, பதுங்கு குழியை அகழ்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் சுமார் 20 அடி ஆழமான குழியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன் பார்வையிட்டிருந்தார்.

அவரின் கட்டளையின் பேரில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணி தொடக்கம் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டது. பிற்பகல் 4.30 மணி வரை தொடர்ந்த ஆய்வில் தகரங்கள் சில மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அகழ்வு பணியை இடைநிறுத்துவதற்குநீதிபதி உத்தரவிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...