Home தென்னிலங்கைச் செய்திகள் உயர் பதவிகளில் உள்ள 488 பேர் தொடர்பில் விசாரணை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உயர் பதவிகளில் உள்ள 488 பேர் தொடர்பில் விசாரணை!

Share
Share

உயர் பதவியில் உள்ளவர்களின் 488 கோப்புக்கள் தொடர்பான விசாரணைளை இலஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் மூத்த அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் நபர்கள் தொடர்பான
488 கோப்புக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகளை தொடங்கியுள்ளது.

இந்த முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகம், பல்வேறு அமைச்சுகள் மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறைக்கு நேரடியாகப் பெறப்பட்டதாகத் தெரியவருகின்றது.

அவற்றில் சிலவற்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியும் பெறப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விசாரணைகளுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூத்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...